Tuesday, November 29, 2005

பீகாரும் பி.சி.சி.ஐயும்....

இது வித்தியாசமான தேர்தல் சீசனாயிருக்கும் போல.

பீகாரை தொடர்ந்து இன்று பி.சி.சி.ஐ.....

எனக்கு பீகார் தேர்தலுக்கும், பி.சி.சி.ஐ தேர்தலுக்கும் பல ஒற்றுமைகள் தோன்றுகிறது.

* இரண்டிலும் தேர்தல் கடந்த முறையை ஒப்பிடும்போது மிக அமைதியாகவே முடிந்திருக்கிறது.
* இரண்டு தேர்தல்களும் தனிக்காட்டு ராஜாவாய் சம்ராஜ்யத்தை ஆண்டவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.
* இரண்டும் கடந்த முறை வெற்றியை அநியாயமாய் பறிகொடுத்த வலுவான எதிர் கூட்டணிக்கு பெரிய வெற்றியை தந்திருக்கிறது.
* இரண்டிலும் உச்சநீதிமன்றம் அவ்வப்போது தலையிட்டிருக்கிறது
* இங்கேயும் அங்கேயும் தேர்தல் பார்வையாளர்கள் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள்.
* இரண்டிலும் வெற்றி வாகை சூடியவர்களுக்கு பெரும் பணிகள் காத்திருக்கிறது.

இப்படி பல ஒற்றுமைகள்.......

சரத்பவார் கடும் போரட்டத்துக்கு பின் பி.சி.சி.ஐயின் தலைவராயிருக்கிறார். இந்த மாநிலத்தை சார்ந்த வாரியத்துக்கு வாக்களிக்கும் அங்கிகாரம் கிடையாது, அந்த மாநிலத்துக்கு இல்லை என்று பல திடுக்கிடும் திருப்பங்களுக்கு பின் ஒரு சிறந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸுக்கு இணையாக நடந்த இந்த தேர்தல் இறுதியில் சுபமாகவே முடிந்திருக்கிறது.



நான் முன்னரே கூறியது போல சரத்பவாரின் முன் ஏகப்பட்ட பணிகள் காத்திருக்கிறது.....

தொலைக்காட்சி உரிமங்கள், வீரர்களுக்கான ஒப்பந்தம், விளையாட்டு மைதானத்தை தேர்வு செய்வது தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சைகள், என்று நிறையவே காத்திருக்கிறது.

உலகின் மிக பணக்கார கிரிக்கெட் வாரியங்களுள் ஒன்றான பி.சி.சி.ஐக்கு இன்னும் ஒரு வலைத்தளம் கூட கிடையாத பெருமையை பெற்றிருக்கிறது.
உலகக்கோப்பை நெருங்கும் வேளையில் இப்போதிலிருந்தே அணியை தயார் செய்யும் கட்டாயம் இருக்கிறது. அதற்கு நீண்ட கால திட்டங்களில் ஈடுபடும் தேர்வுக்குழுவினர், அணித்தலைவர், பயிற்சியாளர் ஆகியோருக்கு தேவையான அனைது உதவிகளையும், அர்சியல் ரீதியான எந்த இடையூறுகளும் ஏற்படாவண்ணம் பார்த்துகொள்ளுதல் அவசியமாகிறது. ஆடுகளம் பற்றி காலங்காலமாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள், வளரும் வீரர்களுக்கு தேவையான உதவிகள் இல்லாதது, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் என்ற கண்டுகொள்ளபட வேண்டிய பல பணிகளும் வரிசையில் இருக்கிறது. மகாரஷ்டிரா அளவிலும் தேசிய அளவிலும் வலுவான எதிர்கட்சிகளுடன் போராடி தொடர்ந்து களத்திலிருக்கும் பவாருக்கு இந்த கடுமையான சாவல்களையும் சமாளிப்பார் என நம்பலாம்....

தொடங்கட்டும் "பவார் பிளே"....

(பி.கு) : மிஸ்டர் பவார், தேர்வுக்குழுவில் கங்குலி அணிக்கு திரும்ப வாதாடிய மூவர் நீக்கப்பட்டதற்கும் உங்கள் CMPக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உறுதியாக நம்பலாமா???

4 Comments:

Blogger Badri Seshadri said...

தேர்வுக்குழு ஒவ்வொரு தேர்தலின்போதும் மாறுவது இயற்கையே.

8:25 AM  
Blogger Movie Fan said...

yes Badri. But there is a chance for this kind of controversy, only when some 3 selectors are replaced and they too are those who supports the comeback of Saurav Ganguly into the team.

-- Vignesh

8:51 AM  
Blogger Doctor Bruno said...

Your Final Observation was good. Even I had thought in the same lines

http://doctorbruno.blogspot.com/2005/11/cricket-predictions.html

10:43 AM  
Blogger rajkumar said...

கங்குலி ஆத்ரவாளர்கள் நீக்கப்பட்டுள்ளது பற்றி நீங்கள் எழுப்பிய கேள்வி உண்மைதான்.

கங்குலி ஆல்ரவுண்டர் என்று அழைக்கப்படும் கேத்தெல்லாம் இனிமேல் நடக்காது என நம்புவோமாக.

அன்புடன்

ராஜ்குமார்

8:07 PM  

Post a Comment

<< Home