Friday, January 13, 2006

VB தொடர்- அதிரடி ஆஸி

இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா பங்கு கொள்ளும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இன்று மெல்போர்னில் துவங்கியது. இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே முதல் போட்டி இன்று நடைபெறுகிறது.

முதல் 15 ஓவர்களில் ஆஸி இரு விக்கெட்டுக்களை எடுத்து 64 ரன்கள் எடுத்திருந்தது. பெரைரா இரு விக்கெடுக்கள் வீழ்த்தியிருந்தார். அப்போதைய நிலையில் இலங்கையின் கை ஓங்கியிருந்ததாக பட்டது. ஆனால் இறுதி நிலவரம் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது.

கடிச், மார்டின் , சிமண்ட்ஸ் மற்றும் கிளார்க்கின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 318 ரன்களை 50 ஓவர்களில் குவித்தது. இதில் மார்ட்டின் மற்றும் சிமண்ட்ஸின் அதிரடி ஆட்டம் குறிப்பிடத்தக்கவை. டெஸ்ட் இடத்தை இழந்த மார்ட்டின், ஒருநாள் மற்றும் அரை நாள் போட்டிகளில் ( அதுதாங்க 20: 20) துவம்சம் செய்து வருகிறார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அரைநாள் போட்டியில் கிட்டத்தட்ட சதம் அடித்தார். இப்போட்டியிலும் பல பவுண்டரிகள், சில சிக்ஸர்கள்.

ஆஸ்திரேலிய அணி ரன்கள் குவிக்காத போதுதான் அதைப் பற்றி அலச வேண்டும், மற்றபடி ஒரு இயந்திரத்தனமையுடன் ரன்களை குவிக்கிறார்கள். அது சில நேரம் போரடிக்க கூட செய்கிறது.

இலங்கை தற்போதைய நிலவரப்படி 10 வது ஓவரில் இரு விக்கெட்டுக்கள் இழந்து 27 ரன்கள் எடுத்துள்ளது. என்னுடைய பார்வையில் எத்தனை ரன்களில் தோற்பார்கள் என்பதை தவிர தோல்வி நிர்ணயிக்கப்பட்ட விசயம். முபாரக்கை தொடக்க ஆட்டக்காரராக இலங்கை அணியினர் அனுப்புகிறார்கள். அவர்களுக்கு முபாரக் இன்னொரு ஜெயசூர்யாவாக வருவாரா? என்ற நப்பாசை உள்ளது. முபாராக்கின் சராசரியும் சாதனைகளும் சொற்பமே. ஜெயசூர்யாவும் ஓப்பனராய் நியமிக்கப்படாத முன் அதிகம் சாதித்தவரில்லை. எனெவே முபாராக் இன்னொரு ஜெயசூர்யாவாக வரலாம் என்பது அவர்களது நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் இன்றைய மேட்சில் இரண்டு ரன்களுக்கே முபாரக் காலி.

ஏதாவது செய்து இலங்கை வெற்றி பெற்றாலே ஒழிய இம் மேட்ச்சை பற்றி எழுத வேண்டிய அவசியம் இல்லை.

0 Comments:

Post a Comment

<< Home