Thursday, January 12, 2006

நாளை வெள்ளி 13ந் தேதி

அனைத்து முன்னாள் பாகிஸ்தான் மற்றும் இந்திய வீரர்களும் கருத்து கந்தசாமிகளாக மாறி சொல்வதை எல்லாம் சொல்லி விட்டார்கள். நாளை முழு கவனமும் ஆடுகளத்தை நோக்கி திரும்பும்.

முதலில் சில கருத்து கந்தசாமிகள் என்ன சொன்னார்கள் என்று பார்ப்போம்.

கவாஸ்கர் மூன்று ஓப்பனர்களையும் அணியில் சேர்க்கச் சொல்கிறார்.( கதைக்குதவாது) . பாகிஸ்தான் ஆடுகளம் ஒன்றும் ஆஸ்திரேலிய ஆடுகளம் அல்ல, அதிகப்படியாக பயப்படுவதற்கு என்கிறார். இது உண்மைதான். வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக வீசும் பட்சத்தில் கூட அதிகப்படியான LBW மற்றும் பவுல்ட் ஆவதற்கான வாய்ப்புக்களே அதிகம். ஒரு நாள் முழுவதும் பந்து தொடர்ந்து ஸ்விங் ஆகாது. ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் பட்சத்தில் பந்தை புல்பிட்ச் செய்துதான் பந்து வீசுவார்கள்.அதில் பந்து காலில் பட்டு அவுட்டாகவோ, போல்ட் ஆகவோ வாய்ப்புக்கள் அதிகம்.

ஜாகிர் அப்பாஸ் கவாஸ்கரை காட்டிலும் சச்சின் சிறந்த ஆட்டக்காரர் என்று கூறுகிறார். எந்த நாட்டின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்களோ அந்த நாடு வெற்றி பெறும் என கணிக்கிறார்.

ஸ்ரீநாத் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளதாக சொல்கிறார். இந்தியாவை ஒரு காலத்தில் அம்பயர்கள் உதவியுடன் துவம்சம் செய்த அக்வீப் ஜாவேத், பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் கோப்பையை வெல்லும் என மார்தட்டுகிறார்.

மோயின் கான் இந்தியாவின் வெற்றி வாய்ப்புகள் அதிகம் என குறிப்பிடுகிறார்.

இந்திய அணியின் ஆட்டக்காரர்கள் பட்டியலை டிராவிட் முடிவு செய்து விட்டார்.ஆனால் அறிவிக்கவில்லை. கங்குலி இடம் பெறுவாரா/ என்ற அலசல் தொடர்கிறது. கங்குலி இடம் பெறக்கூடும் என உள்ளுணர்வு சொல்கிறது.

சென்னைவாசிகள் நேரடி ஒளிபரப்பை செட்டாப் பாக்ஸ் இல்லாமல் பார்க்க முடியாது. வானொலியில் நேர்முக வர்ணனையும் தகராறு என்று சொன்னார்கள்.சஞ்சய் மஞ்ரேக்கர், ஹோல்டிங், ரமிஸ்ராஜா, சிவராமகிருஸ்ணன், டீன் ஜோன்ஸ், வக்கார் யூனஸ் ஆகியோர் கொண்ட 10 வர்ணனையாளர்கள் அணி பணியில் ஈடுபட உள்ளது.

ஒரு சிறப்பான கிரிக்கெட் தொடரை பார்க்க முடியும் என்று நம்புவோமாக.

1 Comments:

Blogger பரி (Pari) said...

Please remove "align=justify". Or simply click on left justify in blogger BEFORE composing.

10:13 AM  

Post a Comment

<< Home