Sunday, January 08, 2006

கிடைத்தது வெற்றி

மூன்று மேட்சுக்களில் உதை வாங்கிய பின், கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது இலங்கை. உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னால் (1996)இவ்வாறான தொடர் தோல்விகளை இலங்கை சந்தித்தது இல்லை என்றே நினைக்கிறேன். தோல்விகள் பல பிரச்சனைகளை வெளிக் கொணர்ந்து விடுகிறது. அணியில் மட்டுமல்ல, கிரிக்கெட் நிர்வாகத்திலும் கூட.வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் வரையில் இப்பிரச்சனைகள் வெளியே தெரிவதில்லை.

இலங்கை அணியில் வாஸ் துணைக்கேப்டனாக திடீரென நியமிக்கப்ப்ட்டுள்ளார். அதைக் குறித்து சர்ச்சையை கிளப்புகிறார்கள். இந்திய சுற்றுப்பயண ஆரம்பத்தின் போது, இலங்கை கிரிக்கெட் நிர்வாக முறையை குறித்து பெருமைப்பட்டுக் கொண்ட ரணதுங்கே தற்போது தனது பதவியை ராஜினமா செய்துள்ளார். அணிக்கு ஊக்கமளிக்க மனோதத்துவ நிபுணர் சாண்டிகார்டனை அழைத்திருக்கிறார்கள். இத்தகைய சிக்கல்களை மீறி ஒரு வெற்றியை பெற்று விட்டார்கள் இலங்கை அணியினர்.

நேற்றைய ஆட்டத்தின் சிறப்பம்சம் இலங்கை 273 ரன்களை குவித்தது. இலங்கை பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்களை எடுப்பதற்கு, போதிய ரன்களை இலங்கை பேட்டிங்கில் எடுப்பது அவசியம். ஏனெனில் இலங்கை பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்தும் அதிரடி பந்துவீச்சாளர்கள் அல்ல. பேட்ஸ்மேனை கூடுதல் ரிஸ்க் எடுக்கச் செய்து விக்கெட்டுக்களை கைப்பற்றும் வகையினர்.

நேற்றைய ஆட்டத்தில் கூட புல்டானும், ஆஸ்லேயும் பெர்ணாண்டோவின் பந்துவீச்சை துவம்சம் செய்தவிதத்தை பார்த்தவுடன், நியூஸிலாந்து சுலபமாக ஜெயிக்கும் என்று நினைத்தேம். ஆனால் இலங்கை எடுத்த ரன்கள் அவ்வணியின் வெற்றிக்கு உதவின.

VB தொடர் விளையாட இலங்கை கூடுதல் நம்பிக்கையுடன் செல்லலாம்.

ஸ்கோர் கார்ட்

0 Comments:

Post a Comment

<< Home