Tuesday, November 29, 2005

கங்குலிக்கு 'ஆப்பு'??!!

'எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன்?' - அநேகமாக கங்குலி மனதுக்குள் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கான தேர்தலில் ஷரத் பவாரின் வெற்றி டால்மியாவின் பன்னெடுங்கால குத்தகைக்கு வைக்கப்பட்ட வேட்டாக
மட்டும் இல்லாமல் இப்போது சுழன்று வந்து கங்குலிக்கும் 'ஆப்பு' வைத்து விடுமோ என்ற அச்சம் கங்குலி ஆதரவாளர்களிடையே எழுந்திருக்கிறது.

காரணம், கங்குலியை டெஸ்ட் போட்டிகளில் ஆட வைக்க வேண்டும் என்று தேர்வுக்குழுவில்கங்குலிக்காக வாதாடிய பிரணாப் ராய், யஷ்பால் ஷர்மா, கோபால் ஷர்மா மூவருமே பவாரின்வெற்றிக்குப் பின்னர் தேர்வுக் குழுவிலிருந்து அகற்றப்பட்டு விட்டனர். இவர்களுக்கு பதிலாக
டெஸ்ட் ஆட்டங்கள் எதையும் ஆடியிராத ரஞிப் பிஸ்வால், சஞ்சய் ஜக்டலே, பூபிந்தர் சிங் ஆகியோர்தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

ஏற்கெனவே சென்னை டெஸ்ட் போட்டியில் கங்குலி ஆட வேண்டும் என்பதற்காக நான்கு மணி நேரம் தேர்வுக்குழுவினரிடையே பெருத்த விவாதம் நிகழ்ந்திருக்கிறது. தேர்வுக்குழு தலைவர் கிரன் மோரேயும், சந்திரசேகரும் கங்குலிக்கு எதிராகவும் தற்போது வெளியேற்றப் பட்டவர்கள் கங்குலிக்கு ஆதரவாகவும் பேசி, கடைசியில் 3-2 என்ற நிலையில் கங்குலி சென்னை டெஸ்டில் ஆடுவது என்று தீர்மானமாகியிருந்தது.

ஆனால், தற்போது கங்குலி ஆதரவாளர்கள் தேர்வுக்குழுவை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் சென்னை டெஸ்டில் கங்குலி ஆடுவாரா என்பது மீண்டும் சந்தேகத்திற்குரியதாயிருக்கிறது.
'பெங்கால் புலி' புல்லைத் தின்ன வேண்டிய கட்டாயம் வந்திருப்பது இந்தியக் கிரிக்கெட்டிற்கு உதவுமா இல்லையா என்பதை சென்னை டெஸ்ட் போட்டிக்குப் பின்னர்தான் தீர்மானிக்க முடியும்.

0 Comments:

Post a Comment

<< Home