Wednesday, November 30, 2005

மூன்றாவது டெஸ்ட் கான்பூரில் இல்லை

இந்தியா - இலங்கை மூன்றாவது டெஸ்ட் கான்பூரில் நடக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு இடம் எது என்று இனிதான் தெரிய வரும்.

கான்பூரில் டெஸ்ட் ஆடுகளம் முனிசிபாலிட்டிக்கு சொந்தமானது. உத்தர பிரதேச கிரிக்கெட் அசோசியேஷனுக்கும் கான்பூர் நகராட்சிக்கும் ஏதோ தகராறு போல...

இதற்கிடையில் சென்னை முதல் டெஸ்ட் வாய்ப்புகள் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. புயல் நாளை இரவு கரையைக் கடக்கும் என்று இப்பொழுது சொல்கின்றனர். நாளைக் காலை முதலே மழை இருக்கும் என்று தகவல்கள் சொல்கின்றன. இன்னமும் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வரவில்லையாம்.

0 Comments:

Post a Comment

<< Home