Tuesday, December 06, 2005

க்ரேக் சேப்பலின் பலிபீடத்தில் நால்வர்

167க்கு ஆல் அவுட் என இந்தியா சேப்பாக்கத்தில் பல்டி போட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்திய அணியின் கோச் க்ரேக் சேப்பலின் வழிமுறைகள் மற்றும் அதற்கு எழுந்துள்ள சில விமர்சனங்களைக் கவனிப்போம்.

சேப்பலை உள்ளே கொண்டுவந்தது ஜக்மோகன் டால்மியா அணி. ஆனால் வளர்த்த கடா மார்பில் பாயும் என்பது போல அவர் கங்குலியின் திறமையிலும், பயிற்சி மற்றும் ·பிட்னஸ் ஆகியவற்றில் கேள்விக்குறி எழுப்பி, அணியை விட்டே துரத்தியடித்தது சென்ற 2 மாதங்களின் முதல் பக்க அல்லது கடைசி பக்க செய்திகள்.

தற்போது சேப்பலின் அடுத்த குறி என இன்னும் 3 நபர்கள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் யாரால் வெளியேற்றப்பட்ட செலக்டர் - யஷ்பால் ஷர்மா என்.டி.டி.வியின் Big Fight நிகழ்ச்சியில் சென்ற சனியன்று கூறியது - சேப்பலின் அடுத்த குறி ஜாகீர் கான், சேவாக் மற்றும் ஹர்பஜன் சிங்.

சில சுட்டிகள்

http://cricket.indiatimes.com/quickiearticleshow/1318700.cms



http://www.outlookindia.com/full.asp?fodname=20051212&fname=Cricket+%28F%29&sid=2








Photos Courtesy: ESPNSTAR, Prajasakti and Telegraph

இதில் ஜாகீர் கான் அணியில் இடம்பெறாததற்கு அவரின் ·பிட்னஸ் மற்றும் ஜான் ரைட் கோச்சாக இருந்த போது, அவரை மிகவும் மதிக்காமல் (அடிக்கவும் சென்றுவிட்ட) நடந்து கொண்ட விதம் என பேசப்படுகிறது.

சேவாக் பெயர் இடம்பெறுவதற்கு அவரின் சமீபத்திய ·பார்ம் (ஒரு நாள் மற்றும் டெஸ்டில்)என்று காரணம் சொல்லப்பட்டாலும், அவரது ·பிட்னஸ் (தொப்பை அதிகம் விழுந்துள்ளது.. இதை சரி செய்யவேண்டும் என சுனில் காவஸ்கரும் எழுதியிருந்தார்) மற்றும் பயிற்சியின் போது சரியாக பங்கு கொள்ளாமை அல்லது ஒருமுகப் படுத்தும் தன்மை இல்லாமை (focus) என கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் பந்து வீச்சு மற்றும் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுப்பதும் தற்போதைக்கு அவரை அணியை விட்டு நீக்காவண்ணம் காப்பாற்றி வருகிறது எனலாம்.

ஹர்பஜன் சிங்: கங்குலி விவகாரம் வெடித்தபோது அவருக்கு ஆதரவாய் குரல் கொடுத்ததும் ஒரு காரணம் என தெரிகிறது. இத்தனைக்கும் ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் எடுக்கும் ஒரு பௌலர். ஆனால் சேப்பலுக்குப் பிடிக்காத காரணம் - பயிற்சியின் போது முழு கவனம் செலுத்தாமை என தெரிகிறது.

அதாவது சேப்பலின் கணிப்புப் படி யாரெல்லாம் அவர் சொல்லும் பயிற்சி மற்றும் ·பிட்னஸ் சங்கதிகளில் சரியாக ஈடுபடவில்லையோ அல்லது உடல்திறனை சொன்னபடி பாதுகாத்து சொல்பேச்சு கேட்காமல் நடந்துகொள்கிறார்களோ அனைவரும் ஹிட் லிஸ்டில் வந்துவிடுவார்கள் என்றே தெரிகிறது.

ஆட்டம் இருக்கும் நாட்களில் (அல்லது முதல் நாள்) இது மாதிரி நைட் கிளப்புகளுக்குச் செல்வது / ஆட்டம் பாட்டம் என இருப்பது நிச்சயம் மறுநாள் மைதானத்தில் விளையாட ஏதுவாக இருக்கப்போவதில்லை. புதிதாக வந்துள்ள இளைஞர்கள் இதை உணருவார்களா ?


இது இந்திய அணிக்கு நல்லதா, கெட்டதா என்பது ஏப்ரல் மாதக் கடைசியில் தெரிந்துவிடும்.

- அலெக்ஸ் பாண்டியன்
06-டிசம்பர்-2005

0 Comments:

Post a Comment

<< Home