Sunday, December 04, 2005

சென்னையில் நான்காம் நாள் ஆட்டம்

இன்று நல்ல வெய்யில் - இதுவரை. மழை பெய்ய வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் சேப்பாக்கம் மைதானத்தில் சுற்றுப்புறங்களில், எல்லைக்கோடுகளுக்கருகில் நிறைய சொதசொதப்பு. அதனால் இன்று ஆட்டம் ஆரம்பமாக தாமதம்.

இன்று எப்படியும் சில ஓவர்களாவது வீசுவார்கள் என்று நினைக்கிறேன். இந்த ஆட்டத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றாலும் தொலைக்காட்சி பணத்துக்காகவாவது ஆட்டம் நடக்கும் என்று கேள்விப்படுகிறேன். ஆட்டம் மொத்தமாக ஒரு பந்துகூட வீசமுடியாமல் ரத்தானால் தொலைக்காட்சி நிறுவனங்கள் (Zee, தூரதர்ஷன்) பிசிசிஐக்கு இந்த ஆட்டத்துக்கான் பணம் தர வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

1 Comments:

Blogger Narain Rajagopalan said...

பத்ரி, கிரிக் இன்போவில் உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் நடைபெறலாம் என்று போட்டிருக்கிறது. இங்கே தி.நகரில் வெயில் அடிக்கவில்லை. கொஞ்சம் வானம் மேகமூட்டமாக தான் இருக்கிறது. இருந்தாலும் பார்ப்போம்.

கிரிக் இன்ஃபோ பத்தி உங்ககிட்ட பேசறதுக்கு பேரு தான் திருப்பதிக்கே லட்டு ;)

10:52 PM  

Post a Comment

<< Home