Monday, December 05, 2005

சென்னையில் ஐந்தாம் நாள் காலை ஆட்டம்

அதிகம் எழும்பாத ஆடுகளம், மட்டையாளர்களின் தேவையில்லாத தடுப்பாட்டம், இலங்கை பந்துவீச்சாளர்களின் - முக்கியமாக சமிந்தா வாஸின் - துல்லியமான பந்து வீச்சு, அத்துடன் சில தேவையற்ற ரன் அவுட்கள், எல்லாம் சேர்ந்து இந்தியாவை படு கேவலமான நிலைக்குத் தள்ளியுள்ளது.

காலை முதற்கொண்டே விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் உள்ளன.

முதலில் திராவிட் - வாஸ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட். அடுத்து டெண்டுல்கர் முரளிதரன் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. பின்னர் லக்ஷ்மண் ரன் ஒன்றைப் பெற விரும்ப, கங்குலி அதை விரும்பாததால் ரன் அவுட் ஆனார் லக்ஷ்மண். பின் கங்குலி கவரில் கேட்ச் கொடுத்து அவுட். பதான் முரளியின் பந்தில் காட் & பவுல்ட். அகர்கர் மீண்டும் தேவையில்லாமல் ரன் அவுட்.

தோனி ஒருவர்தான் தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறார். மற்ற அனைவரும் பயந்து நடுங்கிக்கொண்டு விளையாடியது போல இருந்தது.

தோனி ஒரு நோபாலில் கேட்ச் கொடுத்தார் - அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்.

ஆனால் இலங்கை பேட்டிங் செய்யும்போதும் நிறைய விக்கெட்டுகள் விழும் என்றுதான் தோன்றுகிறது. இன்னமும் ஒரு நாள் இருந்திருந்தால் இந்த ஆட்டத்தில் ரிசல்ட் கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது.

0 Comments:

Post a Comment

<< Home