Monday, December 05, 2005

வெற்றிக்கு யார் காரணம்?

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானின் அபாரமான வெற்றிக்குப் பின்னால்சுஹைப் அக்தாரின் அதிரடி பந்து வீச்சு காரணமா, முகமது யூசு·பின் இரட்டை சதம் காரணமா, இன்சமாமின் தலைமை காரணமா என்று வெற்றியின் ரகசியத்தை பாகிஸ்தான் பத்திரிகைகள் விவாதம்
செய்து கொண்டிருக்க, முன்னாள் ஆட்டக்காரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா வேறு விதமான கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

'பாகிஸ்தானின் வெற்றிக்கு அதன் பயிற்சியாளர் பாப் வூல்மர்தான் காரணம்' என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்ரமீஸ் ராஜா. எந்த அணியுமே வெற்றி பெறுவதற்கு ஒருங்கிணைந்து ஆட வேண்டியது மிக அவசியம்.அதுவும்
கிரிக்கெட் போன்ற ஆட்டத்தில் ஆட்டக்காரர்களின் மனநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பாப் வூல்மர்வந்த பிறகுதான் பாகிஸ்தான் அணியின் 'ட்ரெஸ்ஸிங் ரூமில்' சுமுகமாக நிலை வந்திருக்கிறது. அணியின்
அங்கத்தினர்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையையும், நெருக்கத்தையும் உருவாக்குவதில் வூல்மரின் பங்கு மிக முக்கியமானது. இந்த அடிப்படை மாற்றம்தான் பாகிஸ்தானின் வெற்றிக்குக் காரணம்" என்றிருக்கிறார் அவர்.
அவர் சொல்வதும் நியாயமானதாகத்தான் இருக்கிறது. இது போன்ற ஒரு சூழலை இந்திய அணியினரிடையே உருவாக்க சேப்பலால் முடியுமா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

0 Comments:

Post a Comment

<< Home