Tuesday, December 06, 2005

இலங்கை நல்ல பதிலடி

இந்தியாவின் 167க்கு பதிலாக இலங்கை மோசமாகத் தொடங்கியது. முதல் ஓவரிலேயே ஆவிஷ்கா குணவர்தனே பதான் பந்துவீச்சில் தோனியால் பிடிக்கப்பட்டு அவுட்டானார்.

ஆனால் தொடர்ந்து சங்கக்கார, ஜெயவர்தனா இருவரும் மிக நன்றாக விளையாடினார்கள். அகர்கர், பதான் பந்துவீச்சு அவ்வளவு சரியாக இல்லை. மேலும் ஆடுகளம் சற்று எளிதாக மாறியிருக்கலாம்.

கும்ப்ளே சங்கக்காரவை எல்.பி.டபிள்யூ அவுட் ஆக்கினார். தொடர்ந்து ஜெயவர்தனே தேநீர் இடைவேளை வரை அவுட்டாகாமல் விளையாடினார். ஹர்பஜன் சிங்கை அடித்து விளாசினார்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு கும்ப்ளே பந்துவீச்சில் கம்பீரிடம் பிடிகொடுத்து ஜெயவர்தனா ஆட்டமிழந்தபோது 71 ரன்கள் பெற்றிருந்தார். (14x4, 1x6). இரு அணிகளிலும் சேர்த்து இதுவரையில் விளையாடியவர்களில் மிகச்சிறப்பாக ஆடியவர் இவர்தான் என்பதில் சந்தேகமில்லை.

இப்பொழுது அட்டபட்டுவும் சமரவீராவும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். நிச்சயமாக இலங்கை உளவியல்ரீதியாக இந்தியாவுக்கு பெருத்த அடியைக் கொடுத்துவிட்டது.

திராவிட் டாஸில் ஜெயித்ததும் பந்துவீசியிருக்க வேண்டும் என்பது என் கருத்து.

0 Comments:

Post a Comment

<< Home