Monday, December 19, 2005

பனிவிழும் மலர்வனம்

அஹமதாபாத் மோடேரா மைதானம் சபர்மதி ஆற்றுக்கு வெகு அருகில் உள்ளது. ஆற்றுக்கும் மைதானத்துக்கும் இடையில் பெரிய கட்டடங்கள் ஏதுமில்லையாம். இதனால் வருடம் 365 (அல்லது 366) நாளும் மைதானப் புல்வெளியில் - அதாவது outfieldஇல் - பனிப்பொழிவு உண்டாம். காலையில் ஆட்டம் 9.30க்கு தொடங்க வாய்ப்பே இல்லை! முதல் நாள் அதி நீர் உறிஞ்சியைப் பயன்படுத்தியபின் 10.30க்கு ஆட்டம் தொடங்கியது. இரண்டாம் நாள் 10.00 மணிக்கு. இன்று மூன்றாம் நாளும், இனிவரும் நாள்களிலும் அப்படியேதான் இருக்கும்.

அதே நேரம் மாலையில் குளிர்காலம் என்பதால் சூரிய அஸ்தமனம் வெகு சீக்கிரமே நடக்கிறது. இத்தனைக்கும் அரங்கில் உள்ள விளக்குகளை 4.45க்கே ஏற்றிவிடுகின்றனர். ஆனால் 5.15க்கு மேல் விளக்கிலும் விளையாட முடியாத நிலை. சிகப்புப் பந்தை வெள்ளை விளக்கொளியில் சரியாகப் பார்க்கமுடியாது!

இந்திய தனது 'சுழற்சிமுறை' திட்டத்தைக் கைவிட வேண்டும். டெஸ்ட் போட்டிகள் என்றால் எந்தெந்தக் காலகட்டத்தில் எந்தெந்த நகரங்களில் ஆட்டம் நடைபெறலாம் என்று முன்னதாகவே தீர்மானித்து அங்கு மட்டுமே விளையாட வேண்டும்.

1 Comments:

Blogger Sud Gopal said...

எல்லா மக்களும் ரொம்ப பிசியா இருக்கீங்க போல.

இன்னும் மூணா நாள் ஆட்டம் பற்றிய ஒரு பதிவு கூடப் போடலியே???

4:01 AM  

Post a Comment

<< Home