Sunday, December 11, 2005

இந்தியா முதல் இன்னிங்ஸில் முன்னணியில்

மூன்றாம் நாள் காலை கும்ப்ளே தன் திறமையான பந்துவீச்சைத் தொடர்ந்தார்.

வாஸ் சீக்கிரமாகவே கும்ப்ளே பந்துவீச்சில் மிட்விக்கெட்டில் நின்றிருந்த ஹர்பஜன் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பதான் மலிங்க பண்டாராவை பவுல்ட் ஆக்கினார். முரளிதரன் ஒரு பெரிய சிக்ஸ் அடித்ததற்குப் பிறகு, கும்ப்ளே பந்தில் பவுல்ட் ஆனார். கடைசி விக்கெட்டுக்கு முபாரக்கும் பெர்னாண்டோவும் மிக முக்கியமான சில ரன்களைச் சேர்த்ததும் கடைசியாக பெர்னாண்டோ ஹர்பஜன் சிங் பந்தில் கங்குலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்தியாவுக்கு 60 ரன்கள் முன்னணி.

இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா கம்பீர், பதான் இருவரையும் பேட்டிங் செய்ய அனுப்பியுள்ளது. இதற்கு மாற்றாக இலங்கை முரளிதரனை இரண்டாவது ஓவரிலேயே பந்துவீச அழைத்துள்ளது. இந்த ரிப்போர்டை எழுதும்போது பதான் முரளியை ஒரு சிக்ஸ் அடித்துள்ளார்.

ஆட்டம் சுவையாகச் செல்கிறது!

0 Comments:

Post a Comment

<< Home