Monday, December 12, 2005

பிற நாடுகளில்...

நான் ஊருக்குப் போகும் முன்னர் சில ஹேஷ்யங்களை விட்டுச்சென்றேன். எல்லாமெ தவறாக முடிந்தன.

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மிக அதிகமான ரன்ன்களைத் துரத்தி வெற்றிகண்டு ரெகார்டை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் எட்டு விக்கெட்டுகள் விழுந்தபின்னர், ஒன்பதாவது விக்கெட்டுக்காக மெக்கல்லம், வெட்டோரி ஜோடி சேர்ந்து 74 ரன்களுக்கு பெற்றுக் கிடைத்த வெற்றி. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 331/7 என்ற ஸ்கோரைப் பெற்றது. கடைசி நான்கு ஓவர்களில் மட்டும் ஆஸ்திரேலியா பெற்ற ரன்கள் 71!! இதற்குப் பிறகும் கூட நியூசிலாந்து இந்த ஆட்டத்தை ஜெயிக்கும் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள்?

ஆனால் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியா, தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

ஸ்கோர்கார்ட்

-*-

பாகிஸ்தான் - இங்கிலாந்து முதலாம் ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஜெயிக்கும் என்றேன். இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்தின் அனைத்து மட்டையாளர்களுமே நன்றாக விளையாடினர். ஐம்பது ஓவர்களில் 327/4 என்ற ஸ்கோரைப் பெற்றனர். பாகிஸ்தான் நன்றாகவே இந்த எண்ணிக்கையைத் துரத்தினாலும் விக்கெட்டுகள் விழுந்தகொண்டே இருந்த காரணத்தால் ஆல் அவுட் ஆகி, தோற்றது.

ஸ்கோர்கார்ட்

அதற்கடுத்து இன்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் பழிக்குப் பழி வாங்கியது.

முதலில் ஆடிய இங்கிலாந்து சடசடவென எட்டு விக்கெட்டுகளை இழந்தபோது அதன் ஸ்கோர் வெறும் 130தான்! ஆனால் ஒன்பதாவது விக்கெட்டுக்கான ஜோடி - ப்ளங்கெட், சோலங்கி இருவரும் சேர்ந்து 100 ரன்கள் பெற்றனர். இதனால் இங்கிலாந்து 230க்கு ஆல் அவுட். இந்த எண்ணிக்கையை பாகிஸ்தான் எளிதாகவே பெற்றது. ஏழி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி. கம்ரான் அக்மல் சதமடித்தார்.

1 Comments:

Anonymous Anonymous said...

UNKOLADA PERAY THOOLAAI POOICHUUTHUU

SUMM NOIEE NOIEE ENDU ENTHA NALLUMM ORAA THOOOILLAI

URUPADEEYA ETHAVUU SAIIYALAMEHAN

KONCHAMM PRAYASANAM IRRUKUUMM EELARUKUUMM

7:52 AM  

Post a Comment

<< Home