Wednesday, October 11, 2006

சோம்பியன்ஸ் டிராபி???

எனக்கு ICCயின் (BCCIயையும் சேர்த்துதான்) நடவடிக்கைகளை பார்த்தால் பொன்முட்டையிடும் வாத்து கதைதான் ஞாபகம் வருகிறது. பணம்காய்ச்சி மரம் என்பதற்காக அளவுக்கு அதிகமாய் அதனிடமிருந்து பறிக்க நினைத்தால் மரத்திற்கே ஆபத்தாகத்தான் முடியும். உலகக்கோப்பைக்கு அடுத்து, கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் பங்கு பெறும் மினி உலகக்கோப்பை தொடங்கியது கூட பலருக்கு தெரியாமல் போய்விட்ட நிலைமை.

உள்ளூரில் மேட்ச் என்றால் எந்த அணி ஆடினாலும் ஆஜராகி ஹ‌வுஸ்புல்லாக்கும் நமது ரசிகர்கள் கூட வெறுத்துப்போகுமளவுக்கு ஒரு போட்டி அட்டவணை. மினி உலகக்கோப்பை என ஒன்று தொடங்கப்பட்டபோது, உலகக்கோப்பையில் ரவுண்ட் ராபின், சூப்பர் சிக்ஸ் என்ற வளவள போட்டி முறைகளுக்கு மாறாக "நாக் அவுட்" முறையில் ஆடி எதிர்பாராத அணி வென்ற/தோற்ற சுவாரசியங்கள் அதிகமாய் இருந்தது. ஆட்டங்களை (வருமானத்தை) அதிகரிக்கிறேன் பேர்வழி என மெல்ல மெல்ல போட்டி முறைகளை மாற்றி இந்த முறை ஒரேயடியாக சொதப்பியிருக்கிறார்கள்.

போட்டி துவங்கி முதல் பத்து நாளைக்கு ஜிம்பாப்வே, பங்களாதேஷ் அணிகளுடன் இலங்கையும் மேற்கிந்திய தீவுகளும் விளையாடி இதில் வெற்றி பெறும் முதலிரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுகிறதாம். சாம்பியன்ஸ் டிராபிக்கு எட்டு அணிகள்தான் வேண்டுமென்றால் தரவரிசையில் ஆறு அணிகளை தேர்ந்தெடுத்ததற்கு பதிலாக முதல் எட்டு அணிகளை தேர்ந்தெடுத்து நேரடியாக அனைத்து அணிகளையும் முதல் சுற்றில் ஆடவிட்டிருக்கலாம். பங்களாதேஷும் ஜிம்பாப்வேயும் வெகுகாலமாய் முதல் எட்டு இடங்களுக்குள் இடம்பெறாத நிலையில் இந்த ஒரு சுற்று ஆட்டங்களால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை. (எதிர்பாராமல் ஏதேனும் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் பெரிய மாறுதல் ஏதும் ஏற்படபோவதில்லை). வருவாய்க்காக இப்படி ஆட்டங்களை அதிகரிப்பதால் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறையத்தான் செய்யும்.

ஆனால் ICCயை சொல்லியும் குறையில்லை. இந்தியாவுக்கு எப்படியும் தரவரிசையில் முதல் ஆறு இடங்களுக்குள் கிடைக்காது, அதேவேளையில் இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் இந்தியா சலாமியாவுடன் ஆடினாலும் நிச்சயம் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் சிறப்பாய் ஆடி தகர்த்து விட்ட இந்திய அணியினரைத்தான் குறை சொல்லவேண்டும்.

Cross Posted in http://vicky.in/dhandora

0 Comments:

Post a Comment

<< Home