Tuesday, December 13, 2005

இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி!!

அப்பாடா! ஒரு வழியாய் ஜெயித்தாகிவிட்டது!

இன்று காலையில் ஜெயவர்த்தனேயும் தில்ஷனும் ஆடிக்கொண்டிருக்கும்போது எங்கே கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்று பயந்தேன். நல்ல வேளை மீண்டும் கும்ப்ளே வந்து காப்பாற்றினார். ஹர்பஜனும் பரவாயில்லை. முதல் இன்னிங்க்சில் ஏமாற்றினாலும் இரண்டாவதில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வயிற்றில் பால் வார்த்தார்.

சரி அடுத்த டெஸ்ட்டுக்கு அணியில் ஏதாவது மாற்றம் வேண்டுமா?

நிச்சயம் வேண்டும். அகர்க்கார். அவர் இந்திய அணியில் அதுவும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அளவுக்கு தகுதி பெற்றவர் இல்லை. ஒருநாள் போட்டிகளுக்குக்கூட நெஹ்ரா, ஜாகீர்கான் மற்றும் பாலாஜி போன்றவர்கள் இருக்க இவரை ஏன் மீண்டும், மீண்டும் அணியில் சேர்க்கிறார்கள் என்றுதான் விளங்கமாட்டேன் என்கிறது.

இப்போது அவர் பேட்டிங்கிலும் பிரகாசிப்பதில்லை. Tail Endersஐ விட மோசமாக ஆடுகிறார். இருந்தும் எப்படி? கடந்த முறை இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போதும் அவருக்காக 'நாங்கள் மேனேஜ் செய்துக்கொள்கிறோம்.'என்று சாப்பல் வாதாடியதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. திறமையில்லாத ஒருவரை அணியில் சேர்த்துக்கொண்டு இவர் என்ன மேனேஜ் செய்வது? பாக்கிஸ்தானுக்கு எதிராக பிரகாசித்த பாலாஜியை ஏன் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள்?

இதே கேள்வியை ஸ்ரீகாந்தும், அமர்நாத்தும் கூட டி.டி.யில் Fourth Umpire விவாதத்தின் போது கேட்டார்கள்.

கடந்த காலங்களில் செய்தது போன்று. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற அணியையே மூன்றாவதுக்கும் Retain செய்யாமல் பாலாஜி, ஜாகிர்கான் இருவரில் யாராவது ஒருவரை சேர்க்கவேண்டும். அதே போன்று ஷேவாக் திரும்பி வரும்போது இரண்டாவது டெஸ்ட்டில் இரண்டு இண்ணிங்க்ஸிலும் சரியாக விளையாடாத காம்பீரை நீக்க வேண்டும்.

செய்வார்களா?

1 Comments:

Anonymous Anonymous said...

http://content-ind.cricinfo.com/indvsl/content/story/229537.html

Ganguly is dropped and jabber is included. Gambir is a longterm prospect. so its good

3:55 AM  

Post a Comment

<< Home