Monday, December 12, 2005

நான்காம் நாள் உணவு இடைவேளை

இந்தியா இன்று காலை ஒரு விக்கெட் (கங்குலி) மட்டும் இழந்து 83 ரன்கள் பெற்றுள்ளது. இப்பொழுதைய லீட் 380 ரன்கள். இலங்கை ஜெயிப்பது மிகவும் கடினம். பிரகாஷ் சொன்னதுபோல ஒன்றும் நடக்கவில்லை.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகான முதல் ஒரு மணி நேரம் இந்தியா விளையாடினால் போதுமானது. அந்த ஒரு மணி நேரத்தில் இந்தியா 40-50 ரன்கள் பெற்றால் போதும். 420-430 லீட் இருக்கும்போது ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவிக்கலாம். அல்லது அதற்குள்ளாக இந்தியா ஆல் அவுட் ஆனாலும் குற்றமில்லை.

பொதுவாக முதல் இன்னிங்ஸில் 400 அடிப்பதற்கும் கடைசி இன்னிங்ஸில் அடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. வெகுசில அணிகளே அதனைச் செய்துள்ளன. அதற்கு நல்ல ஆடுகளமும் அவசியம். தில்லி ஆடுகளம் மிகவும் மெதுவாகவும் பந்து உயரம் குறைந்தும் வருவதால் ஜெயவர்தனே, சங்கக்கார போன்ற அடித்தாடுபவர்களுக்கு ஏதுவானதல்ல. அட்டபட்டு நின்று ஆடலாம். குணவர்தன, தில்ஷன், முபாரக், சமரவீரா போன்றவர்கள் அனுபவம் குறைந்தவர்கள். பிற இயற்கை இடையூறுகள் வராவிட்டால் இந்த டெஸ்ட் இந்தியா பையில் என்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.

காலையில் விழுந்த ஒரே விக்கெட் கங்குலி; முரளியில் தூஸ்ராவில் உள்விளிம்பில் பட்டு பவுல்ட் ஆனார். பெற்ற ரன்கள் 39. யுவராஜ் சிங் 56 ரன்களுடனும் தோனி 21 ரன்களுடனும் விளையாடுகின்றனர்.

1 Comments:

Blogger Jayaprakash Sampath said...

இதற்கு முந்தைய பதிவில் இட்ட பின்னூட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் :D

11:22 PM  

Post a Comment

<< Home