Tuesday, December 13, 2005

இலங்கையின் விடாமுயற்சி

இன்று காலை வேகமாக சுருண்டுவிடும் இலங்கையின் இன்னிங்ஸ் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம். ஆனால் அதே சமயம் மொஹாலியில் பாகிஸ்தான் டிரா செய்தது போல நடக்காமல் இரண்டு விக்கெட்டுகளையாவது காலையில் கைப்பற்றியது இந்தியாவின் சாமர்த்தியம்.

அகர்கர் முபாரக்கை எல்.பி.டபிள்யூவும், கும்ப்ளே தில்ஷனை பவுல்டும் செய்தனர். இப்பொழுது இலங்கை உணவு இடைவேளையின்போது 203/7 என்ற ஸ்கோரில் உள்ளது. ஜெயவர்தனா ஒருவர்தான் அங்கீகரிக்கப்பட்ட மட்டை விற்பன்னர். வாஸ், முரளிதரன், பெர்னாண்டோ ஆகியோர் மட்டுமே பாக்கி. இந்தியா எவ்வளவு சீக்கிரம் ஆட்டத்தை முடிக்கும் என்று பார்ப்போம்.

1 Comments:

Blogger பரஞ்சோதி said...

இந்தியா வெற்றி.

அணியினர் அனைவருக்கும் பாராட்டுகள்.

தொடர்ந்து பதிவுகள் கொடுக்கும் நண்பர்களுக்கும் பாராட்டுகள்.

11:33 PM  

Post a Comment

<< Home